Total Pageviews

Sunday 14 December 2014

ஆசிரியர்கள் ஊதிய உயர்வு: தமிழக அரசு கைவிரிப்பு; போராட்டம் நடத்த சங்கங்கள் முடிவு

செலவினத்தை காரணம் காட்டி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க முடியாது என தமிழக அரசு கைவிரித்து விட்டது.இதனால் ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு எதிராக  போராட்டம் நடத்தமுடிவு

செய்துள்ளன.
தமிழக தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு
அடிப்படை ஊதியம் ரூ.5,200, தர ஊதியம் ரூ.2,800, தனி ஊதியம் ரூ.750வழங்கப்படுகிறதுமத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிஇடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9,300, தரஊதியம் ரூ.4,200 வழங்கப்படுகிறதுமத்திய அரசு ஆசிரியர்களின்ஊதியத்தை போல் தமிழகத்திலும் வழங்க வேண்டுமென அனைத்துஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குதொடரப்பட்டது

'இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாகஅரசு பரிசீலித்து முடிவெடுக்குமாறுஐகோர்ட் உத்தரவிட்டது. 'நாடுமுழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1,017 இடைநிலைஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்ஆனால் தமிழகத்தில் ஒருலட்சத்து 16 ஆயிரத்து 129பேர் பணிபுரிகின்றனர்மத்திய அரசுஆசிரியர்களை போல் அவர்களுக்கும் ஊதிய உயர்வு அளித்தால்தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.668 கோடி கூடுதல் செலவாகும்.இதனால் ஊதிய உயர்வு அளிக்க முடியாது,' என நிதித்துறை செயலர்சண்முகம் அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் கடிதம்அனுப்பியுள்ளார்இதனால்  அதிருப்தி அடைந்துள்ள ஆசிரியர்சங்கங்கள் அரசுக்கு எதிராக  போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.