Total Pageviews

Sunday 14 December 2014

CPS : அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட பங்களிப்பு பணம் மாயம்: புதிய ஓய்வு ஊதிய திட்டத்தில் தொடர்கிறது சிக்கல்

  பங்களிப்பு ஊதிய திட்டத்தின் (சி.பி.எஸ்.,) கீழ்கடந்த, 10 ஆண்டுகளில்அரசுப் பணியில் சேர்ந்தவர்களில்ஓய்வு பெற்ற, 2,000 பேர் மற்றும்இறந்த, 1,000 பேர் வாரிசுகளுக்கு இதுவரை ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த பயனும்

கிடைக்கவில்லைபணியில் இருப்பவர்களுக்கு சமீபத்தில் வந்த, 'சி.பி.எஸ்.,' பட்டியலில்பிடிக்கப்பட்ட பணம் முழுமையாக சென்றுசேராததால்அரசு ஊழியர்கள் அச்சமடைந்து உள்ளனர்.

மேற்கு வங்கம்திரிபுராவை தவிர்த்துநாட்டில் உள்ள பிறமாநிலங்களில்அரசு பணியாளர்களுக்கான புதிய பென்ஷன் திட்டம், 2004ல் அறிமுகப்படுத்தப்பட்டதுஇதன்படிஅரசு ஊழியர்கள் பங்களிப்புஅடிப்படையில்அவர்கள் சம்பளத் தொகையில் இருந்துகுறிப்பிட்டசதவீதம் பிடித்தம் செய்யப்பட்டுபணி ஓய்விற்குப் பின்பிடித்தம்செய்யப்பட்ட தொகையில் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படும்.இத்திட்டத்தைதமிழக அரசும் ஏற்றுக் கொண்டு, 2003 ஏப்ரல் முதல்,முன் தேதியிட்டு அமல்படுத்தியதுஇத்திட்டத்தை அமல்படுத்தியதுமுதலேஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

குழப்பம்:

இருப்பினும்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தைமாற்றதமிழக அரசு முன்வரவில்லைஅதே நேரம்இத்திட்டத்தில்ஏற்பட்டுள்ள குழப்பமும் இதுவரை தீரவில்லைஅரசு ஊழியர்களிடம்இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகைமத்திய அரசிடம் அளிக்கப்படவேண்டும்ஆனால்இத்திட்டத்தில் தமிழக அரசு ஊழியர்களுக்கானமுகப்பு எண் தரப்பட்டுபிடித்தம் செய்யப்பட்ட, 2,000 கோடி ரூபாய்எங்கு எங்கு முதலீடு ஆகிறது என்பது தெரியவில்லைபுதியஓய்வூதிய திட்டத்தின் கீழ்மத்திய அரசு பணியில் சேர்ந்தவர்களில்,இறந்தவர்களின் குடும்பத்தினருக்குபழைய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் குடும்ப ஓய்வூதியம்பணிக்கொடை வழங்கப்படுகிறதுஆனால்,தமிழகத்தில் கடந்த, 10 ஆண்டுகளில் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ்பணியில் சேர்ந்தவர்களில், 2,000 பேர் ஓய்வு பெற்று விட்டனர்; 1,000பேர் இறந்து விட்டனர்இவர்கள்குடும்பத்தினருக்கு குடும்பஓய்வூதியம்பணிக் கொடை எதுவும் தமிழக அரசு வழங்க வில்லை.இதனால்அவர்கள் அவர்கள் அதிருப்தியில் உள்ளதுடன்பணியில்உள்ளவர்களுக்கும் கலக்கம் ஏற்பட்டு உள்ளது.

அரசு ஊழியர் சங்க மாநில செயலர் கண்ணன் கூறுகையில், ''புதியஓய்வூதிய திட்டம் இந்தியா முழுவதும் பொதுவானது எனதமிழகஅரசு கூறுகிறதுதமிழகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அரசுஊழியர்களுக்கு மத்திய அரசு போல் குடும்ப ஓய்வூதியம்,பணிக்கொடை வழங்க வேண்டும்,'' என்றார்.

பணம் மாயம்:

இதற்கிடையில்பணியில் உள்ளோருக்குபிடித்தம் செய்யப்படும்பணமும் முறையாக பதிவாகவில்லை என்ற குற்றச்சாட்டும் கிளம்பிஉள்ளதுதமிழகத்தில்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிக்குசேர்ந்தவர்களுக்குசமீபத்தில்இந்தாண்டு பிப்ரவரி மாதம்வரையிலானஓய்வூதிய திட்ட பிடித்தம் தொடர்பான பட்டியல் வந்தது.இதை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்ததுஅதில்,பெரும்பாலானவர்களுக்குஇரண்டு மாதங்களுக்கு மேல், 'மிஸ்சிங்கிரெடிட்எனபதிவு செய்யப்பட்டிருந்ததுசம்பளத்தில் பிடித்தம்செய்யப்பட்ட பணம்கணக்கில் வரவில்லையே என விரக்திஅடைந்தனர்.

ஏற்கனவே இத்திட்டத்தில் சேர்ந்துஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை கிடைக்கவில்லைஇந்நிலையில்தற்போது பிடித்தம்செய்யப்படும் பணமும் கணக்கில் வரவில்லைஎனவேஅதற்கானபட்டியலை எடுத்துகருவூலத்தில் கேட்க முடிவெடுத்துள்ளோம். - தினமலர்