மதச்சார்பின்மை என்றால், அரசுக்கென எந்த மதமும் இருக்கக் கூடாது என்றும், மதத்தின் அடிப்படையில் குடிமக்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது என்றும் குடியரசுத் துணைத்தலைவர் ஹமீது அன்சாரி கூறினார். மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரையாடியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.