Total Pageviews

Sunday 14 December 2014

காஸ் சிலிண்டர் மானியம் பெறுவது எப்படி?- அதிகாரிகள் விளக்கம்

சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தை பெறுவதில் பொதுமக்கள்மத்தியில் குழப்பம் நீடிக்கிறதுஇந்நிலையில் இத்திட்டத்துக்குவிண்ணப்பிக்க டிச.31ம் தேதி இறுதி நாள் கிடையாது என்பதால்

பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்று எண்ணெய்நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மத்திய அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு நேரடி மானியத்திட்டத்துக்கான விண்ணப்பங்கள் எரிவாயு விநியோகஸ்தர்கள் மூலம்வழங்கப்பட்டு வருகிறதுஇந்நிலையில் இதற்கான விண்ணப்பபடிவங்களை பெறுவதற்காகவும்பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைசமர்ப்பிப்பதற்காகவும் வங்கிகள் மற்றும் எரிவாயு விநியோகமையங்களில் நாள்தோறும் கூட்டம் அலைமோதுகிறதுசமையல்எரிவாயு மானியம் பெறுவது தொடர்பாக தெளிவான தகவல்களைதெரிவிக்காததே இதற்குக் காரணம் என்ற புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்துசமூக ஆர்வலரான தரணிதரன் என்பவர் கூறும்போது, “எரிவாயு மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்களை டிச.31ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்ஆனால்எண்ணெய் நிறுவனங்கள், 2015 மார்ச் 31ம்தேதி வரை இதற்கு அனுமதி வழங்கியுள்ளதுமேலும்,விண்ணப்பங்களை நகல் அல்லது பதிவிறக்கம் (டவுன்லோடு)செய்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஆனால்சிலவிநியோகஸ்தர்கள் தங்கள் அலுவலகத்திற்கு வந்துதான்விண்ணப்பங்களைப் பெற வேண்டும் என்றும் ஆதார் அட்டையைநகல் எடுத்து (ஜெராக்ஸ்இணைப்பதற்கு பதிலாகஅதை ஸ்கேன்செய்து இணைக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகின்றனர்மேலும்,படிவங்கள் ஆங்கிலத்தில் இருப்பதால்பாமர மக்கள் அதைப் பூர்த்திசெய்ய பெரும் சிரமப்படுகின்றனர்’’ என்றார்.
இப்பிரச்சினை குறித்துதிருவல்லிக்கேணியில் உள்ள பாரத் எரிவாயுவிநியோகஸ்தர் ஒருவர் கூறும்போது, “எரிவாயு மானியம்பெறுவதற்கு அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் உள்ளது.ஆனால்எங்களுக்கு தினசரி வேலையை பார்ப்பதற்கே நேரம்போதவில்லைஇந்நிலையில்எரிவாயு மானியம் பெறுவதற்கானவிண்ணப்பங்களை பெறும் பணியும் எங்களிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளதுஇதனால்எங்களுக்கு பணிச்சுமைஅதிகரித்துள்ளதுஎனவேவிரைவாக இப்பணியை முடிப்பதற்காகநாங்கள் டிச.31ம் தேதிக்குள் படிவங்களை சமர்ப்பிக்கும்படிவாடிக்கையாளர்களிடம் கூறுகிறோம்” என்றார்.
வங்கிக் கணக்கு துவங்குவதில் குழப்பம்
இதனிடையே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்குதொடங்கினால்தான் மானியம் கிடைக்கும் என்று கூறப்படுவதால்குறிப்பிட்ட சில வங்கிகளில் மட்டும் கூட்டம் அலைமோதுகிறது.இதுகுறித்துதிருவல்லிக்கேணியில் உள்ள தேசியமயமாக்கப்பட்டவங்கி ஒன்றின் மேலாளர் கூறும்போது, “எரிவாயு மானியம் பெறவாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் அவர்களின் ஆதார் அட்டைஎண்ணை நாங்கள் பதிவு செய்து தருகிறோம்டிச.31ம் தேதிக்குள்அவற்றை பதிவு செய்ய வேண்டும் என எங்களுக்கு எந்த உத்தரவும்வரவில்லைமேலும்பொதுமக்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்என்ற உடன் இந்தியன் வங்கிபாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன்ஓவர்சீஸ் வங்கிகளுக்கு மட்டுமே வருகின்றனர்.
இந்த மானியம் பெற அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும்கணக்கு தொடங்கலாம்மேலும்இந்த மானியம் பெற பிரதமரின்ஜன்தான்’ திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்கவேண்டும் என்றதவறான தகவலும் மக்கள் மத்தியில் பரவியுள்ளதுஇதனால்சிலர்ஒரு சேமிப்புக் கணக்கு இருக்கும் நிலையில்மற்றொரு கணக்கைதுவக்கித் தரும்படி கூறுகின்றனர்இது எங்கள் பணிச்சுமையைஅதிகரித்துள்ளது’’ என்றார்.
அதிகாரிகள் விளக்கம்
இப்பிரச்சினைகள் குறித்துஇந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள்கூறியதாவது:
சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தை பெற நான்கு வகையானபடிவங்கள் விநியோகிக்கப்படுகிறதுஇவற்றைப் பூர்த்தி செய்துஎரிவாயு விநியோகஸ்தர்களிடம் அளிக்க வேண்டும்இந்தவிண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாதுமேலும், http://petroleum.nic.in/dbt/index.php என்ற இணையதளம் மூலமாகவும்படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்மேலும்ஆன்லைன்மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்ஆதார் அட்டை வைத்துள்ளவர்கள்www.rasf.uiadai.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது 1800-2333-555 என்ற கால் சென்டர் மற்றும் ஐவிஆர்எஸ் எஸ்எம்எஸ்மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்ஆதார் அட்டை இல்லாதவர்கள்www.MyLPG.in என்ற இணையதளத்தின் மூலமாகவும்விண்ணப்பிக்கலாம்.
2015, மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பித்தால் மானியம் கிடைக்கும்.அப்படியும் தவறும்பட்சத்தில்ஏப்.1ம் தேதி முதல் ஜுன் 31ம் தேதி வரைஇறுதி கெடு வழங்கப்பட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்கு பிறகு விண்ணப்பிப்பவர்களுக்கு மானியத்தொகை கிடைக்காதுஅவர்கள் சந்தை மதிப்பில்தான் எரிவாயுவைவாங்க வேண்டும்ஆதார் அட்டை இல்லாதவர்கள் வாக்காளர்அடையாள அட்டைரேஷன் கார்டு ஜெராக்ஸ் ஆகியவற்றில் ஏதேனும்ஒன்றை சமர்ப்பித்தால் போதும்மேலும்டிச.31க்குள் பதிவு செய்யவேண்டும் என எவ்வித காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.எனவேபொதுமக்கள் அச்சம் அடையத் தேவையில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.